Uncleஉம் அன்புத் தம்பியும் ஆரத்தழுவிய அன்பின் பொழுது..
இது மிகச்சிறந்த அரசியல் மாண்பு
பாராட்டவேண்டிய ஓர் எடுத்துக்காட்டு.
இதற்கு முதல் தமிழ்நாட்டு அரசியலில் MGR - கலைஞருக்குப் பிறகு இப்படியான அன்னியோன்னியம் எதிரெதிர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் இருந்ததா என்பதை தமிழக நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.
ஸ்டாலின் விஜயைக் கைபிடித்து அழைத்துச் சென்றதெல்லாம்…
அடடா
இவர்களுக்காக இரு தரப்பிலும் நின்று களமாடியவர்களுக்கு ( அதுவும் வாக்கே இல்லாமல் இங்கே நின்று காற்றில் கம்பு சுற்றியோருக்கு) எப்படியிருந்திருக்கும்ம்?
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
ஆனால் உண்மையாக முதலமைச்சராக விஜய் இன்று மூத்த அரசியல் தலைவர்களைத் தானே நேரில் சென்று சந்தித்தது மிகவும் சிறப்பானது.
இது நேற்று பதவியேற்பின் பின் பெரியார் திடலில் கி.வீரமணி அவர்களைச் சந்தித்ததில் ஆரம்பித்தது.
வழமையாக பொன்னாடையை ஏற்காத சீமானே மறுப்பின்றி அன்புக்காக அதை ஏற்றுக்கொண்டார் போலும்..
அன்பே வெல்லட்டும்.

No comments:
Post a Comment