விஜய் வெற்றி !
தமிழக மக்கள் தம் தீர்ப்பை தெளிவாக வழங்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சி மீதான வெறுப்பும் இரு திராவிடக் கட்சிகளினதும் மாறி மாறி வந்த ஆட்சிகளின் அலுப்பும் சேர்த்து மாற்று ஒன்றைத் தேடிய வேளையில் நம்பிக்கை தரக்கூடிய புதிய தெரிவாக விஜய் வந்தார்.
தனியே திரைக் கவர்ச்சி என்று மட்டுமன்றி பொருத்தமான மாற்றுத் தெரிவாக அமைவார் என்று மக்கள் மத்தியில் ஒரு மனவுறுதியைக் கட்டியெழுப்பிய விஜய், விமர்சனங்களுக்கு மத்தியில் தன்னைக் கட்டியெழுப்பிய ஒவ்வொரு அடித்தளமும் சரியான strategyயுடன் செய்யப்பட்டவை.
எம்மிற் பலருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருந்த அவதானிகளுக்கே தெரியாமல் நிகழ்ந்துகொண்டிருந்த இந்த மிகப்பெரும் அரசியல் பூகம்பத்தை விஜய் தன் ஆழமான நகர்வுகளால் - ஆனால் உறுதியான உரைகள் (இவை கூட கேலி செய்யப்பட்டாலும் தனது இலக்குக்குரிய மக்கள் எவரோ அவர்களை சரியாக அவற்றை அடையச் செய்தது அவரது பலம்) + நடவடிக்கைகளோடு தானாக இந்த வெற்றியைக் கனிய வைத்த ஆட்சியாளரின் தவறுகளும் அடாவடி விமர்சனங்களும் கூடவே மக்களின் அனுதாபமும் சேர்ந்துகொண்டது.
ஆனால் நான் பார்த்து ஆச்சரியப்பட்டதும் ரசித்ததும் கடைசி நான்கைந்து ஆண்டுகளில் பாடல் வெளியீட்டு மேடைகளிலிருந்து தேர்தல் மேடைகள் வரை மெருகேறி வந்த அவரது உரைகளும் அதற்கான உழைப்பும்.
(social media, youth attraction, சினிமா பாணியிலான power packed பாடல்கள் எல்லாம் கோடிக்கணக்கான பலம் கொண்ட மற்றவர்களால் கூட போட்டி போட முடியாதவொன்றாக அமைந்துபோனது)
அதில் தெரிந்த உறுதியும் கூட.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பகிரங்க சவால் விடுவது விஜய் போன்ற ஒருவருக்கு இலேசானதல்ல.சினிமாத்தனமும் இயல்பை மீறிய ஹீரோயிசமும் இருந்தாலும் பல நேரம் அந்த presentation + charismaவை ரசித்தே இருந்தேன்.
ஆனால் அதற்குப் பிறகு வருகிற அழுத்தங்களையும் சமாளித்து சொன்னபடியே விட்ட பஞ்ச் வசனங்களை நடத்தியும் காட்டி 'முதல்வன்' படத்தை நிஜத்தில் நடத்திக் காண்பித்திருக்கிறார்.
(முதல்வன் படக்கதை தனக்கு அப்போது வேண்டாம் என்று நிராகரித்தும் இருந்தார் விஜய்)அவரது திரை வளர்ச்சியும் வெற்றியும் போலவே கடைசி சில ஆண்டுகளின் கட்டமைப்புக்களும் நேர்த்தியான திரைக்கதை தான்.
இதெல்லாம் காகம் இருந்து பனம் பழம் விழுந்த கதை அல்ல.கண்முன்னே நிகழ்ந்த ஓர் அரசியல் அற்புதம்.
மிகப்பெரிய முயற்சியும் முதலீடும் இதன் பின்னால் இருந்ததோடு வலி தாங்கி, விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் உழைப்பை வழங்கக்கூடிய திடமும் அதற்கேற்ற அணியும் இருந்திருக்கவேண்டும்.
விஜய், தவெகவின் கொள்கைகள், கட்டுப்பாடில்லாத அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், வெறியர்கள், அவர்களது நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்கள் இருக்கின்றன தான்.
ஆனால் இந்த வெற்றியும் அதற்கான scheming + strategies & இன்றைய வெற்றியின் சாதனைகள் ஆகியன மெச்சிப் பாராட்டவும், முடிந்தால் பின்பற்றவும் படவேண்டியவை.
ரசிகர்களுக்கான தளபதியாக இருந்து இனி மக்களுக்கான (தனக்கு வாக்களிக்காத 3 கோடி பேருக்கும் சேர்த்தே) தலைவனாக புது வழி காட்டுவதற்கும் சேர்த்து மனமார்ந்த வாழ்த்துகள் விஜய்.
பெரிய சவாலைக் கடந்த உங்களுக்கு இனி 118ஐ அடைவதும் அதற்குப் பின் உங்கள் ரசிகர்களை உங்கள் மக்கள் சேவைக்கும் உங்கள் அன்றாடப் பயணங்களுக்கும் மக்களைச் சந்திக்கும்போதும் பழக்கப்படுத்தி ஒழுக்கப்படுத்துவதும் தான் அதை விடப் பெருஞ்சவாலாக அமையப்போகிறது (இன்றும் அவரது வாகனத்துக்கு முன்னால் வந்து குதித்து வீழ்ந்து அன்பைக் காட்ட முற்பட்டோர் தந்த சங்கடத்தை முகத்தில் காட்டாமல் மறைத்த விஜயைப் பார்க்க பாவமாக இருந்தது) என்பது தெளிவு.
எவ்வளவோ பண்ணிட்டீங்க...
நல்லதே நடக்கட்டும் 


No comments:
Post a Comment