Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, August 2, 2013

வையகம் வாழவிடு - வைரமுத்து இயற்கையிடம் மனிதருக்காக

சகத்திர ஆண்டு - 2000 (எழில் அண்ணாவால் அறிமுகமான வார்த்தை) பிறக்கும் காலகட்டத்தில் வைரமுத்துவின் இந்தப் பாடல் தான் என் நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பிடிக்கும்.

ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு

பிறந்த புதிய நூற்றாண்டுக்காக அப்போது 'சக்தி'யில் நான் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலின் பல வரிகளை சிலாகித்து இயற்கையிடம் மனிதத்தின் வேண்டுகோள்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

13,14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு தடவை இந்தப் பாடலை எனது 'சூரிய ராகங்கள்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய நேரமும் இந்தப் பாடல் அதே போல புதிதாக, அதே இனிமையும் , பாடலின் 'இளமையும்' 'புதுமையும்' மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான்.

அதே போல, வைரமுத்து புதிய நூற்றாண்டிடம் வேண்டிய வேண்டுகோள்கள் 'எல்லாமே' இன்னமும் நிறைவேறாமலேயே கிடக்கின்றன.

பாடலின் எல்லா வரிகளும் ரசனையுடையவையாக  ஆழமாக உணர்ந்து மனதோடு இயைந்த சில வரிகளை அன்று கத்தரித்து ஒலிபரப்பியதும், இன்றும் ஞாபகம் வைத்திருப்பதும் கவிஞரின் வெற்றியாக இருந்தாலும், பாடகர் நவீன், உதித்  நாராயணன் பாணித் தமிழ் உச்சரிப்பில் பாடலின் ஜீவனை சிதைத்திருக்கிறார் என்பது கொடுமையிலும் கொடுமை.

தண்ணீரில் மூழ்காது என்பதை 'மூள்காது' என்று பாடிய K.J.யேசுதாசையே கண்டித்துத் திருத்திய கவிஞர் வைரமுத்து, தன் அழகான அர்த்தமுள்ள பாடலின் அர்த்தங்களையே சீரழித்துள்ள பாடகர், அதுவும் புதிய பாடகரைத் திருத்தாமல் விட்டது ஆச்சரியமே...

பாடலின் சரியான வரிகளைத் தரவேண்டும் என்று உன்னிப்பாக அவதானித்து ஓரளவுக்கு இங்கே பதிந்துள்ளேன்.
எனினும் இணையத்தில் இந்தப் பாடலின் வரிகளைத் தேடியபோது எல்லா இடங்களிலும் ஒரே மூலப்பிரதியின் பிழைகளோடு அர்த்தங்களே மாறிப்போய்க் கிடப்பதைக் கண்டேன்.

கவிஞர் சரியான வரிகளைத் திருத்திப் பதிவேற்றினால் திருப்தி.
அல்லது கவிஞரின் மகன் கார்க்கி தன் பாடல்களைப் பதிவேற்றுவது போல, தந்தையாரின் பாடல்களையும் தொகுத்தால் மகிழ்ச்சியே.

மனம் ரசிக்கும், மனிதத்தை நேசிக்கின்ற சில முக்கிய வரிகள்...

ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு 
இந்த சொற்களின் வலிமை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.

ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
எங்கள் உலகம் இப்போது தேடும் நிம்மதிக்கான விஷயங்கள் இவை. ஆனால்  சாத்தியமில்லைத் தான்.

பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா

இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா

பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா

இப்போது என் சின்ன மகனின் வாழ்க்கையில் அனுபவரீதியாக உணரும் நிலை.

மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு

இந்த வரிகளில் கவிஞர் சிலிர்க்கவும் வியக்கவும் வைக்கிறார்.
வைரமுத்துவை இன்னொருவர் விஞ்ச முடியுமா என்று ரசிக்க வைக்கிற பல இடங்களில் ஒன்று இது.
நாம் வரும் வாடகை வீடான  பூமியில் நாம் விரும்பும்வரை வாழவிட்டால் என்ன என்ற கேள்வி நியாயமானதே.
ஆனால் யாரிடம் கேட்பது?


படம்: முகவரி
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: தேவா
பாடியவர்: நவீன்


ஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு

வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா
வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா
அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
நிலவுக்கு போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு 

நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் களைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத ஒரு பூமியை நீ கொண்டு வா

இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிலா ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
சாதி பார்க்காமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா

புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
போர்க்களம் உழுதுவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
நிலவுக்கும் போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு



ஆண்டுகள் கடந்து மறைந்தாலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பாடல் ஒலித்து  பிறகு 
"மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு" 
என்ற வரிகள் ஓயாமல் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைத் தவிர்க்கமுடியாது.


Wednesday, December 12, 2012

ரஜினி 63 @ 12-12-12 12:12 - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 2

அபூர்வ ராகங்களில் ஆரம்பித்து அதிரடி மன்னனாக மாறி, அறுபத்து மூன்றிலும் அயராது திரைப்பயணம் சென்று கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





திரையில் எவ்வளவுக்கெவ்வளவு தனது ஸ்டைலினால் அன்று முதல் இன்று வரை வயது வித்தியாசமில்லாமல் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளாரோ, அதேபோல ரஜினி திரைக்கு வெளியே தனது எளிமையினாலும், இயல்பான நடத்தைகளாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தியிருகிறார்.

அனைவரும் இவருக்கு நண்பர்களே.. 
இதோ பாருங்கள்.... தனது திரையுலக வாழ்க்கையில் ரஜினியின் நண்பர்களை..

ரஜினிகாந்துடன் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு நட்சத்திரங்களும், பெரும் புள்ளிகளும் சேர்ந்து நிற்கும் காலம் கடந்த புகைப்படங்கள்.


பழசை மறக்காத ரஜினி.. நண்பர்களுடன்...


அறிமுகப்படுத்திய குருநாதருடனும் நேரடிப் போட்டியாளரும், நண்பருமான கமலுடனும் 


இல்லறத் துணையை இணைத்துக்கொண்டபோது 


ரஜினி - லதாவை வாழ்த்தும் கமல் -வாணி கணபதி 


 நடிகர் திலகத்துடன்......


அதிக படங்களில் சேர்ந்து நடித்த ஆத்ம நண்பருடன்...
ரஜினியின் வார்த்தைகளில் சொல்வதானால் "திரையுலக அண்ணா"


புரட்சித் தலைவரிடம் விருது வாங்கும் பெருமிதம்...


முள்ளும் மலரும் படப்பிடிப்பில். இயக்குனர் மகேந்திரன், நடிகர் சரத் பாபுவுடன்..


இன்னொரு இனிய நண்பர் இசைஞானியுடன் ஒரு இனிய பொழுதில்...


சப்பாணியும் பரட்டையும்.... 16 வயதினிலே..
"இது எப்பிடி இருக்கு?"


 கலைஞர் கருணாநிதியுடனும் திரைக் கலைஞர் குடும்பத்துடனும்
சந்திரமுகி பட வெற்றிவிழாவில்.. வீரவாள் ஏந்தும் ரஜினி....


எண்பதுகள், தொண்ணூறுகளின் நான்கு நட்சத்திர நாயகர்கள்....
விஜயகாந்த்,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் & சத்யராஜ்


முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன்...


மூத்த மகளின் திருமணத்தில் இப்போதைய தமிழகப் பிரதமர் ஜெயலலிதாவுடன்....


இரண்டு சூப்பர் ஸ்டார்கள்...
அமிதாப்பும் ரஜினியும்.... 


சிரஞ்சீவியுடனும் கமலுடனும் 


தளபதி படப்பிடிப்பில் மணிரத்னம் - ஓம் பூரியுடன்


ஆந்திராவின் நாயகர்களுடன்.. 


அமீர் கானுடன் ஆசையோடு...


பாரதப் பிரதமருடன் பவ்யமாக 


எத்தனை தரம் சந்தித்தாலும் "நினைத்தாலும் இனிக்கும்" & "இளமை ஊஞ்சலாடுகிறது" இருவருக்கும்...


லகானுக்கு  பாசத்தோடு வாழ்த்து...


உலகக் கிண்ண இறுதிப் போட்டியின்போது - இந்திய அணியின் ராசியாக ? :)


நட்சத்திர அணிவகுப்பு...
கே.பாலாஜி, கமல், ஜெய்சங்கர், ரஜினி, விஜயகுமாருடன் 


ஆந்திரப் படவுலக விழாவில்... நட்சத்திரங்கள் & அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் 


 எண்பதுகள், தொண்ணூறுகளின் நட்சத்திரங்கள் சந்தித்த ஒரு நல்ல பொழுதில்.... நாயகராக ரஜினி...

அதிக படங்களின் நாயகியான என்றும் அழகி ஸ்ரீதேவியுடன்....



இசைப்புயலுடனும், கொலைவெறி புகழ், உறவுக்காரப் பையன் அனிருத்துடனும்...

இசைஞானியை மகிழ்வுற வைக்க ஒரு விசில்...


அஜித்-ஷாலினி திருமண நிகழ்வில் தம்பதி சமேதராக..


தனுஷ் மருமகனாக்கிய ரஜினி குடும்பத்தின் முதலாவது திருமண நிகழ்வில்....



படங்களைப் பல்வேறு இடங்களில் சுட்டு எடுத்துள்ளேன்....
அவற்றை இணையம் ஏற்றி எனக்கும் உதவியிருந்த இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் நலன்விரும்பி நட்புக்களுக்கு நன்றிகள்.

ரகம் ரகமாக ரஜினி - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 1


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 63வது பிறந்தநாளுக்காக இணையத்தில் தேடி, சுட்டு எடுத்த அவரது வித்தியாசமான தோற்றங்கள்... 

பொதுவாகவே சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்துக்குள் சிக்கிய பிறகு ஒரே மாதிரியான கதைகள், ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் என்று ரஜினி அரைத்த மாவையே மசாலாக்களை மட்டும் சற்று மாற்றி மாற்றி அரைக்கிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருபவர் ரஜினி .

ஆனால் இந்தப் படங்களைப் பாருங்கள்... 

சிக்கிக்கொண்ட வட்டத்துக்குள்ளே இருந்துகொண்டே ரசிகர்களையும் இழக்காமல், தயாரிப்பாளர்களையும் நொடிக்காமல் தன்னால் முடிந்தளவு பாத்திரங்களில் கொஞ்சம் வித்தியாசம் (கொஞ்சமாக இருந்தாலும்) சில மாற்றங்களைக் காட்டி வந்துள்ளார் இந்த ஸ்டைல் காந்தம்.....

இமயமலை தேடி இளைப்பாறும் அறுபத்து மூன்று வயது இளைஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....



























படங்களைப் பல்வேறு இடங்களில் சுட்டு எடுத்துள்ளேன்....
அவற்றை இணையம் ஏற்றி எனக்கும் உதவியிருந்த இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் நலன்விரும்பி நட்புக்களுக்கு நன்றிகள்.

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin