Friday, June 24, 2011

சண்டிகாரில் க்ளிக் க்ளிக் - பாறைப் பூங்காவும், படங்களும்

சண்டிகார் பாறை/கல் பூங்காவில் (Chandigarh Rock Gardenசில கிளிக்குகள்.....



உலகக்கிண்ண அரையிறுதி (இந்தியா vs பாகிஸ்தான்) பார்த்த அடுத்த நாள் சண்டிகாரில் ரவுண்ட்ஸ் போனபோது அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பாறை/கல் பூங்காவுக்கு சென்று இருந்தோம்..

கற்களால் ஆன சிலைகள், கழிவுப் பொருட்களால் ஆன கலைப்படைப்புகள் மட்டுமல்ல, இன்னும் காதலர் பூங்காவும் வேறு...
பெரிய தொகையான கட்டட, தொழிற்சாலை, வீட்டு கழிவுப் பொருட்களை சேர்த்து ஒரு கலைக்கூடமாக மாற்றியுள்ள ரசனையும் அழகும் எங்களின் நான்கு மணிநேரப் பொழுதுகளை அங்கே செலவிடச் செய்திருந்தது.
 
அங்கே எடுத்த சில சுவாரஸ்யமான கிளிக்குகள்.

கல்லுக்கு முன்னால் கலைஞன் ;) 

நேக் சந்த் என்பவரது கற்பனையில் உருவாக்கப்பட்ட இந்த கல் பூங்கா, இந்திய மக்களின் படைப்புத்திறனுக்கு சமர்ப்பணம் என்ற வாசகங்கள்.
1988ஆம் ஆண்டு July மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கழிவுப் பொருட்கள், உடைந்த மாபிள்களால் உருவாக்கப்பட்ட கலை சிற்பங்களுடன் நண்பர் விமல் 

அடுக்கப்பட்ட பானைகளும் அருகே நானும் 

                                                 நிழலிலும் கலையழகு.. 
தெரிவது பானைகளாலான கோபுரம்..  

அந்தக் கால அரசர்களின் நீச்சல் தடாகத்தின் முன்னால் ...

ஒரு சுவாரஸ்ய சுரங்கப்பாதை 

செயற்கையாக ஒரு குகைக் கூடம்

உடைந்த சிலைகளின் கற்களால் ஒரு அரண் 

நீர்வீழ்ச்சியுடன் ஒரு அழகான அரண்மனை முகப்பு.. 
குளுமையும் அழகும்..

இந்த அரண்மனையை மட்டும் நம்ம சினிமாக்காரங்க இன்னும் பார்க்கலையோ?
இல்லாவிட்டால் இங்கே எடுத்த பாடல்காட்சிகளை நான் பார்க்கலையோ?

ஷூட்டிங் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு போட்டோவாவது ஷூட் பண்ணிக்கிறேனே..

கோடுகளும் கோலங்களும் கோபுரங்களில் கலைவடிவங்களாகின்றன..

இயற்கையையும் இணைக்கின்ற செயற்கை கலைக்கூடம்..
மரங்களின் விழுதுகளும் கோட்டையின் சுவர்களோடு..

படிகளில் ஏறியபின் தான் யோசிக்கவேண்டி இருக்கிறது..
மீண்டும் இறங்கவேண்டுமா என்று..

சாய்ந்தாலும் கோட்டைச்சுவரில் தான்..

பல்லவர் காலமும் கொஞ்சம் ஞாபகம் வருகிறதா?

ஒரு அகழியும் சுரங்கமும்.. 
அரண்மனைஎன்றால் இவை இல்லாமலா?

படிக்கட்டிலும் பல வடிவங்கள்..

வளைந்தும் நெளிந்தும் மேலும் கீழும் நீளும்
படிகள்.. 

செயற்கை அரண்மனையும் கூட ஆளும் ஆசையைத் தந்துவிடுகிறது..
கோட்டை கொத்தளங்களும், தடாகமும் தண்ணீரும்..

இந்த நீர் வீழ்ச்சி கூட உருவாக்கியது தானாம்.. 
இயற்கையை சில நேரங்களில் ஜெயிக்கிறான் மனிதன்.

காதலருக்கு இதம்..
கலை ரசிகருக்கு இனிமை....
அழகுக்குக் குறைவில்லை..

இது என்னவாக இருக்கும்? 
ஏறி நின்று யோசித்தாலும் ஊகிக்க முடியவில்லை 

வருங்கால முதலீட்டுக்கு இப்போதே ஒத்திகை ;)

சிறைச்சாலை எனது சிந்தனைக்கூடம் என்கிறாரோ?

வளைந்து நெளியும் பாதை..
அழகு மங்கையரின் அந்தப்புரத்துக்கு எம்மை அழைத்துச் செல்கிறதாம்...

அழகிகள் நீராடும் இடம் இப்படித்தான் இருக்குமாம்..
இது யாருக்கு வேண்டும்? அழகிகள் எங்கே?

கிணறு.. 
பழைய விஷயங்கள் மறந்து போகாமல்..

கிணறு காட்டுகிறேன் பாருங்கள்..

உடைந்த பொருட்களால் என்றோ ஒரு நாள் உடைந்து போகும் மனிதர்கள்..

இன்னொரு பக்க நீர்வீழ்ச்சி..
விழுவது இங்கே மட்டும் தான் அழகு..

உச்சத்தில் ஒரு கோபுரத்துடன் சில உருவச் சிலைகளுடன்
இமயத்தை ஞாபகப்படுத்துகிறதாம்..

இதோ கண்டோம் சிவனை..

திறந்தவெளிக் கலையரங்கின் ஒரு பக்கம்..

இந்தியனில் கவுண்டரைக் கடித்தவரும் இங்கே உலவுகிறார்..
உலாவும் போய்வரலாம் ஒட்டகத்தில் ஏறி..

அரங்கின் பார்வையாளர் அமரும் பகுதி..
இவையும் கழிவுப் பொருட்களால் தான் கட்டப்பட்டவை..
கழிவுகளும் கலைகளாகியுள்ளன இங்கே.. 

ஊஞ்சல்..
வரிசையாகப் பல..
சிறுவர் முதல் ஜோடிக் காதலர், இளமை தொலைத்த முதியவர்கள் அனைவருக்கும்
ஊஞ்சல்கள் இங்கேயுண்டு..


புற்றரையுடன் பூங்கா..
காதலருக்கு மட்டும் என்றில்லை..

ஒட்டகத்தை உயிருடன் கண்டோம்.. 
இங்கே குதிரைகள் சிலைகளாக..

கழிவுப் பொருட்களையெல்லாம் இப்படி இவங்க மாற்றி இருக்காங்களே..
நம்ம நாட்டிலையும் இது நடக்குமா?

இவ்வளவு கஷ்டப்பட்டு படம் பிடிச்சு, பதிவாயும் போட்டிருக்கேனே 
பார்ப்பாங்களா?
கலைவடிவங்களுக்கு திருஷ்டி கழிக்கத்தான் நம்ம இரண்டு பேரின் படங்களையும் போட்டிருக்கோம் என்று கண்டுபிடிச்சிருப்பாங்களோ?

எவ்வளவு பார்த்திட்டாங்க.. இதையும் பார்த்து சகிக்க மாட்டாங்களா?




Thursday, February 17, 2011

Warm Up Clicks - கிரிக்கெட் க்ளிக்குகள்

இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டி பார்க்க சென்றிருந்த போது க்ளிக்கிய சில படங்கள்

பந்துவீசத் தயாராகும் முரளி...


ஊடகவியலாளர் பகுதியின் கண்ணாடி அறைகளினூடு மைதானம் 


அரங்கத்தின் அறிவித்தல் பலகைகளில் அழகு தமிழும் உண்டு 


ஸ்கோர் போர்ட் - பழமையினை நினைவூட்டும் 


பார்வையாளர் அரங்குகள் - மெருகேறி அழகாக 


பகலிலேயே பிரகாசிக்க ஆரம்பிக்கும் மின் விளக்குகள்


மைதானத்தின் மற்றொரு தோற்றம் 

விக்கெட் வீழ்த்தப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளே வீரர்கள் - வெளியே நான் 


பந்துவீசத் தயாராகும் மாலிங்க 

மின்னொளிக் கோபுரங்களில் ஒன்று 

தனது ஓட்டத்தை ஆரம்பிக்கத் தயாராகும் மாலிங்க 


off திசைக் காவலர்கள் 


புது மெருகு பெற்றுள்ள பிரம்மாண்ட ஊடகவியலாளர் அறையின் வெளிப்புறத் தோற்றம் 



இரவில் மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் துடுப்பாடும் இலங்கை அணி 

அடிக்கத் தயாராகும் தரங்க..


அடுத்த ஓவரின் ஆரம்பத்தில்.. தொப்பி கொடுக்கும் சமி... தமக்குள்ள பேசும் இலங்கை வீரர்கள்.. இடம் மாறும் எதிரணி வீரர்கள்..


நீண்ட கால நெருங்கிய நண்பன்,விளையாட்டுத் துறை செய்தியாளர்,வலைப் பதிவர் அருணுடன் நான் 


Tuesday, February 8, 2011

மைக் ஹசி உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாததுக்கான காரணம்

இது நேற்று நடந்தது.. நம்ம 'விக்கிரமாதித்தன்' ராசி ஹசிக்கு தெரியாமப் போச்சே....
பாவம் ஹசி.. பாவம் ஆஸி..

Twitter

Michael Hussey (@mikehussey75) is now following your tweets (@LoshanARV) on Twitter.
Michael Hussey followed you using SocialOomph.

Mike20hussey295_normal
Michael Hussey
263,1413,133
tweetsfollowingfollowers

You and @mikehussey75 both follow 3 users:
@mikehussey75 follows 2 users who follow you:
You already follow Michael Hussey.
What's Next?
If you believe Michael Hussey is engaging in abusive behavior on Twitter, you may report Michael Hussey for spam.

Thursday, November 11, 2010

தீனா சுட்ட முருகன் பாடல்..

அண்மையில் வெளிவந்து அனைவரது காதுகளையும் ரம்மியமாக்கி இருக்கும் வல்லக்கோட்டை திரைப்படப் பாடல் 'செம்மொழியே செம்மொழியே' (கலைஞர் எழுதி,இசைப் புயலின் இசையில் வந்த செம்மொழியே பாடல் அல்ல..)
கவிஞர் தபூஷங்கர் எழுதிய அழகான வரிகளை தமிழ்த் திரையுலகின் அற்புத ஜோடி,காலத்தை வென்ற குரல்வளம் கொண்ட S.P.பாலசுப்ரமணியம்+S.ஜானகி பாட தீனா இசை அமைத்துள்ளார்.


ஆனால் கொடுமை இறுவட்டில்,வானொலியில் கேட்ட ஜானகி குரலைத் திரைப்படத்தில் கேட்கமுடியவில்லை. வேறு யாரோ ஒரு பாடகியை வைத்து பாட வைத்துள்ளார்கள்.
இன்றும் இளமை ததும்பும் ஜானகி அம்மையாருக்கு மரியாதை தரவாவது திரையிலும் அவர் குரலையே பின்னணியில் ஒலிக்க விட்டிருக்கலாம்.

அற்புதமான காதல் வரிகளைத் தந்த தபூஷங்கரையும் பாடல் காட்சி காயப்படுத்தி இருக்கும்.
மென்மையான வரிகள் கொண்ட பாடல் திரையில் அள்ளித் தருவதோ கவர்ச்சிக் காட்சியை.


பாடலைக் கேட்டீர்களா?
இணையமெங்கும் தேடியும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க காட்சியுடன் பாடல் கிடைக்கவில்லை.
(அதற்காக இந்தப் பாடலுக்காக வல்லக்கோட்டை பார்த்து இரண்டரை மணி நேரத்தையும் உங்கள் பணத்தையும் வீணாக்காதீர்கள்)

தீனாவின் மெட்டமைப்பையும் இசையமைப்பையும் நீங்கள் மெச்சி இருந்தால் அடுத்த பாடலைக் கீழே கேட்டு விட்டு ஒன்றில் உங்களை நீங்களே நொந்துகொள்வீர்கள்.. இல்லையேல் தீனாவை மனதுக்குள் நீங்கள் அறிந்த கெட்ட வார்த்தைகளால் வைது தீர்ப்பீர்கள்..


இந்த முருக பக்திப்பாடல் T.M.சௌந்தரராஜன் பாடியது.
இசையமைத்தவர் அமரர் குன்னக்குடி வைத்தியநாதன்.

எப்படியெல்லாம் உருவி,உல்டா செய்கிறார்கள் பாருங்கள்..

தேவா கந்தர் சஷ்டி கவசத்தை உல்டா செய்து பதினெட்டு வயது (சூரியன் படப் பாடல்) பாடலாக்கினார்.
இப்போது தீனா இன்னொரு பிரபல முருகன் பாடலை உல்டா ஆக்கியுள்ளார்.

இன்று இந்துக்களின் கந்தர் சஷ்டி விரதத்தின் இறுதி நாள்..
அதற்கான சிறப்புப் பதிவாக பக்த கோடிகள் நினைத்துக்கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

நேற்று வல்லக்கோட்டை (நொந்து,வெந்து) பார்த்த பிறகு மனதில் தோன்றிய பதிவு இது..


செம்மொழி என்று ஆரம்பித்தாலே சர்ச்சை தானா? 
  ஒரு வேளை முருகன் தமிழ்க் கடவுள் என்பதனால் துணிச்சலோடும் உரிமையோடும் முருகன் பாடல்களை சினிமாவுக்குள் எடுக்கிறார்களோ???

Tuesday, October 19, 2010

ஆயுத பூஜை - எந்திரன் ஸ்டைல் !!!!!

ஆயுத பூஜை - எந்திரன் ஸ்டைல்  !!!!!


ஆயுத பூஜையன்று எனக்கு வந்திருந்த வித்தியாசமான வாழ்த்து...
எப்பிடியெல்லாம் ஆயுத பூஜை கொண்டாடுறாங்கப்பா..

எனக்கு அனுப்பி வைத்திருந்தவர் கட்டாரிலுள்ள என் தம்பி செந்தூரன் - ரஜினி ரசிகன் :)

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin